படம்: காதல்
பாடியவர்: ஹரி சரண்
பாடல் வரிகள்:நா.முத்துக்குமார்
உனக்கென இருப்பேன்,உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்உனக்கு முன் இறப்பேன்.
கண்மணியே... பொன்மணியே.... அழுவதேன்..... கண்மணியே!
வழித்துணை நான் இருக்க...
(உனக்கென இருப்பேன்)
கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்.
கண்மணி காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா?
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான்
வண்ணாத்திப்பூச்சிகள் பார்த்திடுமா?
மின்சார கம்பிகள் மீதுமைனாக்கள் கூடு கட்டும்.
நம் காதல் தடைகளை தாண்டும்.
வளையாமல் நதிகள் இல்லை,
வலிக்காமல் வாழ்க்கை இல்லை.
வரும் காலம் காயம் ஆற்றும்.
நிலவொளியை மட்டும் நம்பி
இலையெல்லாம் வாழ்வதில்லை,
மின்மினியும் ஒளி கொடுக்கும்.
தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்.
தோழியே... இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்.
தோளிலே நீயுமே சாயும்போது எதிர்வரும்
துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்.
வெந்நீரில் நீ குளிக்க விறகாகித் தீ குளிப்பேன்,
உதிரத்தில் உன்னை கலப்பேன்.
விழிமூடும்போது முன்னே பிரியாமல் நான் இருப்பேன்,
கனவுக்குள் காவல் இருப்பேன்.
நான் என்றால் நானேயில்லை,
நீதானே நானாய் ஆவேன்.
நீ அழுதால் நான் துடிப்பேன்.
(உனக்கென இருப்பேன்)
Monday, September 15, 2008
Friday, September 12, 2008
தீயில் விழுந்த தேளா? இவன் தீயில் வழிந்த தேனா?
படம் : GOD FATHER
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : A.R.ரஹ்மான்
தீயில் விழுந்த தேளா? - இவன்
தீயில் வழிந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?
(தீயில்)
மழையின் நீர் வாங்கி, மலையே அழுவது போல்,
தாயின் உயிர் தாங்கி, தனயன் அழுவானோ?
உயிரைத்தந்தவளின், உயிரைக்காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?
தங்கம் போலே இருந்தவள்தான்,
சருகைப் போலே ஆனதனால்,
சிங்கம் போலே இருந்த மகன்,
செவிலியைப் போலே ஆவானா?
(தீயில்)
ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா அம்மா!
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா அம்மா!
(ஓர்)
நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா!
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா!
எனக்கேதும் ஆனதுன்னா, உனக்கு வேறு பிள்ளையுண்டு!
உனக்கேதும் ஆனதுன்னா,எனக்கு வேற தாயிருக்கா?
நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை,
கண்ணில் மணியாய்ச் சுமந்தவளை,
மண்ணில் விட்டு விடுவானா?
மனதில் மட்டும் சுமப்பானா?
தீயில் விழுந்த தேளா? - இவன்
தீயில் வழிந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?
(தீயில்)
தாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்!
தாயின் காலடியே உலகம் முடியுமிடம்!
உயிரைத் தந்தவளின், உயிரைக் காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?
கருணைத் தாயின் நினைவினிலே,
கல்லும் கொஞ்சம் அழுதுவிடும்!
கண்ணீர்த் துளிகளின் வேகத்திலே,
கண்ணின் மணிகளும் விழுந்துவிடும்!
(தீயில்)
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : A.R.ரஹ்மான்
தீயில் விழுந்த தேளா? - இவன்
தீயில் வழிந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?
(தீயில்)
மழையின் நீர் வாங்கி, மலையே அழுவது போல்,
தாயின் உயிர் தாங்கி, தனயன் அழுவானோ?
உயிரைத்தந்தவளின், உயிரைக்காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?
தங்கம் போலே இருந்தவள்தான்,
சருகைப் போலே ஆனதனால்,
சிங்கம் போலே இருந்த மகன்,
செவிலியைப் போலே ஆவானா?
(தீயில்)
ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா அம்மா!
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா அம்மா!
(ஓர்)
நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா!
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா!
எனக்கேதும் ஆனதுன்னா, உனக்கு வேறு பிள்ளையுண்டு!
உனக்கேதும் ஆனதுன்னா,எனக்கு வேற தாயிருக்கா?
நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை,
கண்ணில் மணியாய்ச் சுமந்தவளை,
மண்ணில் விட்டு விடுவானா?
மனதில் மட்டும் சுமப்பானா?
தீயில் விழுந்த தேளா? - இவன்
தீயில் வழிந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?
(தீயில்)
தாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்!
தாயின் காலடியே உலகம் முடியுமிடம்!
உயிரைத் தந்தவளின், உயிரைக் காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?
கருணைத் தாயின் நினைவினிலே,
கல்லும் கொஞ்சம் அழுதுவிடும்!
கண்ணீர்த் துளிகளின் வேகத்திலே,
கண்ணின் மணிகளும் விழுந்துவிடும்!
(தீயில்)
Subscribe to:
Posts (Atom)