Tuesday, November 17, 2009

பாடல் : வசீகரன்
குரல் : கிருஷ்ணராஐ; குழுவினர்
இசை : வி.எஸ்.உதயா

வல்லைவெளி காற்றடிக்கும்
திரளி மீன் துள்ளியெழும்
ஒடியல் கூழ் குடித்தால்
மனமெங்கும் விண்கூவும்

பல்லவி

பனங்காய்ப் பணியாரமே பனங்காய்ப் பணியாரமே
பச்சைக் கொழுந்து வெத்திலையே
உன் பார்வை கொஞ்சம் பத்தலையே
பனையோலைப் பாய் விரிச்சு
படுத்துறங்கும் மணியக்கா மணியக்கா
கமுகமரப் பாக்குத் தந்து கவுக்கிறது என்னக்கா

சரணம் 1

காங்கேசன்துறை சுண்ணாம்பை கொஞ்சம்
தடவித் தடவிகொடடி
உன் கையால என் வாய் சிவக்க
வெற்றிலை மடிச்சுக் கொடடி

கொக்கார மூலைக்குள்ளே கொக்கு வந்து நிக்குது
கொக்கரக்கோ சேவல் என் வீட்டுக் கூரையில் ஏறுது.

கீரிமலை பனங்கள்ளும் களுத்துறைக் கருவாடும்
ஒன்றாகச் சேர்த்தடிச்சா கிக்குத்தான் கிக்குத்தான்

நான் கோவிற்கடவை ஆளு! நீ
சேலை கட்டிய தேரு !

சரணம் 2

மட்டு நகர் தயிர் எடுத்து
வளைஞ்சி நெளிஞ்சி வாடி
என் உயிரை பிடித்து உறைய வைத்து
உறியில் வைத்துப் போடி

மண்பானைத் தயிர் கனக்கம் என் நெஞ்சு துடிக்கும்
சும்மாடாய் நான் வரவா? சும்மாடாய் நான் வரவா?

கண்டிக் குளிருலதான்
கைகால் விறைக்குதடி
கொஞ்சம் சூடேத்த
நெஞ்சு நினைக்குதடி

முல்லைத்தீவு போவோம்
முயலு இரண்டு பிடிப்போம்
நீ மூச்சிழுக்கும் நேரம்
நான் பேச்சிழந்து போவேன்