Thursday, December 25, 2008

மருதாணி மருதாணி

படம்: சக்கரக்கட்டி
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வாலி
பாடியவர்: மதுஸ்ரீ

மருதாணி.. மருதாணி...
மருதாணி விழியில் ஏன்?
அடி போடி தீபாலி
கங்கை என்று கானலைக் காட்டும்
காதல் கானல் என்று கங்கையைக் காட்டும்
வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்

மருதாணி விழியில் ஏன்?

அடி போடி தீபாலி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல்தான்
நிலையான பாடல்தான்
அலையோசை எந்நாளும் ஓயாது

மருதாணி.. மருதாணி விழியில் ஏன்?

அவன் இதய வீட்டில் வாழும்
அவள் தேகம் வெந்து போகும்
என அவன் அருந்திட மாட்டான்
சுடும் நீரும் சுடும் சோறும்
காதலி கை நகம் எல்லாம்
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்

ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி
உணரவில்லை இன்னொரு பாதி

(மருதாணி விழியில் ஏன்)

அவள் அவன் காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய்ப்பால் போலே
எந்நாளும் பரிசுத்தம்
ஆத்திரம் நேத்திரம் மூட
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்

ஆகமொத்தம் அவசரக் கோலம்
அவளுக்கிது காட்டிடும் காலம்

(மருதாணி விழியில் ஏன்)

கையில் மிதக்கும் கனவா நீ

படம்: ரட்சகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்

கனவா... இல்லை காற்றா...
கனவா.. இல்லை காற்றா...

கையில் மிதக்கும் கனவா நீ...
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ...
இப்படி உன்னை ஏந்தி கொண்டே..
இந்திர லோகம் போய் விடவா?..
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
சந்திர தரையில் பாயிடவா?...........
(கையில்..)

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி..
அதை கண்டு கொண்டேனடி...
(நிலவில்..)

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது...
(காதல்..)

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்..
உயரம் தூரம் தெரியாது...
(உன்னை..)

உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்..
என்னால் தாங்க முடியாது..
(கையில்..)

Monday, October 13, 2008

நெஞ்சில் ஜில் ஜில் ஜில்

படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
இசை:- ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியது:- சின்மயி

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே!
கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே!
கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல நீ வந்தாயே!
சுவாசமாக நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!

ஒரு தெய்வம் தந்த பூவே!
கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது சொந்தம் நீ!
எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ!
கருவில் முள்ளும் நீ!
செல்ல மழையும் நீ!
சின்ன இடியும் நீ!
செல்ல மழையும் நீ!
சின்ன இடியும் நீ!
பிறந்த உடலும் நீ!
பிரியும் உயிரும் நீ!
பிறந்த உடலும் நீ!
பிரியும் உயிரும் நீ!
மரணம் மீண்ட ஜனனம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே!
கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது செல்வம் நீ!
எனது வறுமை நீ!
இழைத்த கவிதை நீ!
எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ!
இரவின் கண்ணீர் நீ!
இரவல் வெளிச்சம் நீ!
இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ!
இழந்த சிறகும் நீ!
எனது வானம் நீ!
இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே!
கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே!
கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல் நீ வந்தாயே!
சுவாசமாய் நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!

சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு

படம்: சக்கரக்கட்டி
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: பா.விஜய்
பாடியவர்கள்: பென்னி தயால்இ சின்மயி

சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
அம்மம்மா அழகம்மா அடிநெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா சிற்பங்கள்(??) எவனம்மா

ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு பிழி கெஞ்சல்
ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு பிழி கெஞ்சல்
நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல்
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்
கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்
நிறம் மாறிப் போனதென் மஞ்சள்
இனி உனக்கும் எனக்கும் முத்தக் காய்ச்சல்
அடி துவங்கு துவங்கு வெட்கக் கூச்சல்

வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்
மழையாய்ப் பட்டானே கோடு கோடு கோடாய்
வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்
மழையாய்ப் பட்டானே கோடு கோடு கோடாய்
யார் யாரோ அவன் யாரோ
என் பேர்தான் கேட்பாரோ
என் பேரோ உன் பேரோ
ஒன்றென்று அறிவரோ

(சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா)

உம்மா உம்மா
ஐயோ கசக்கும்
சும்மா சும்மா
கேட்டால் இனிக்கும்
காதல் கணக்கே வித்தியாசம்
சுடுமா சுடுமா
நெருப்பைத்(??) தீயே
சுகமா சுகமாகாதல் கனவே
உயிர் வாசம்நீ உருகி வழிந்திடும் தங்கம்
உன்னைப் பார்த்த கண்ணில் ஆதங்கம்
உன் எடையும் இடையும் தான் கொஞ்சம்
உன் வீட்டில் உணவுக்கா பஞ்சம்

( சின்னம்மா சிலகம்மா )

வெள்ளை இரவே
இரவின் குளிர் நீ
தெளியும் நதியே
நதியின் கரை நீ
நீயோ அழகின் ரசவாதம்
கொஞ்சல் மொழியே
மொழியின் உயிர் நீ
உறையா பனியே
நீ என் நூறு சதவீதம்
நீ பூக்கள் போர்த்திய படுக்கை
உன் உதடு தேன்களின் இருக்கை
நின் உடலின் பயில்கிறேன் கணக்கை
உனைப் பாட ஏதடி தணிக்கை

(ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்)

Monday, September 15, 2008

உனக்கென இருப்பேன்... உயிரையும் கொடுப்பேன் !!

படம்: காதல்
பாடியவர்: ஹரி சரண்
பாடல் வரிகள்:நா.முத்துக்குமார்

உனக்கென இருப்பேன்,உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்உனக்கு முன் இறப்பேன்.
கண்மணியே... பொன்மணியே.... அழுவதேன்..... கண்மணியே!
வழித்துணை நான் இருக்க...
(உனக்கென இருப்பேன்)

கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்.
கண்மணி காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா?
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான்
வண்ணாத்திப்பூச்சிகள் பார்த்திடுமா?
மின்சார கம்பிகள் மீதுமைனாக்கள் கூடு கட்டும்.
நம் காதல் தடைகளை தாண்டும்.
வளையாமல் நதிகள் இல்லை,
வலிக்காமல் வாழ்க்கை இல்லை.
வரும் காலம் காயம் ஆற்றும்.

நிலவொளியை மட்டும் நம்பி
இலையெல்லாம் வாழ்வதில்லை,
மின்மினியும் ஒளி கொடுக்கும்.
தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்.
தோழியே... இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்.
தோளிலே நீயுமே சாயும்போது எதிர்வரும்
துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்.
வெந்நீரில் நீ குளிக்க விறகாகித் தீ குளிப்பேன்,
உதிரத்தில் உன்னை கலப்பேன்.
விழிமூடும்போது முன்னே பிரியாமல் நான் இருப்பேன்,
கனவுக்குள் காவல் இருப்பேன்.
நான் என்றால் நானேயில்லை,
நீதானே நானாய் ஆவேன்.
நீ அழுதால் நான் துடிப்பேன்.
(உனக்கென இருப்பேன்)

Friday, September 12, 2008

தீயில் விழுந்த தேளா? இவன் தீயில் வழிந்த தேனா?

படம் : GOD FATHER
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : A.R.ரஹ்மான்

தீயில் விழுந்த தேளா? - இவன்
தீயில் வழிந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?
(தீயில்)

மழையின் நீர் வாங்கி, மலையே அழுவது போல்,
தாயின் உயிர் தாங்கி, தனயன் அழுவானோ?
உயிரைத்தந்தவளின், உயிரைக்காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?

தங்கம் போலே இருந்தவள்தான்,
சருகைப் போலே ஆனதனால்,
சிங்கம் போலே இருந்த மகன்,
செவிலியைப் போலே ஆவானா?
(தீயில்)

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா அம்மா!
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா அம்மா!
(ஓர்)

நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா!
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா!
எனக்கேதும் ஆனதுன்னா, உனக்கு வேறு பிள்ளையுண்டு!
உனக்கேதும் ஆனதுன்னா,எனக்கு வேற தாயிருக்கா?

நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை,
கண்ணில் மணியாய்ச் சுமந்தவளை,
மண்ணில் விட்டு விடுவானா?
மனதில் மட்டும் சுமப்பானா?

தீயில் விழுந்த தேளா? - இவன்
தீயில் வழிந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?
(தீயில்)

தாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்!
தாயின் காலடியே உலகம் முடியுமிடம்!
உயிரைத் தந்தவளின், உயிரைக் காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?

கருணைத் தாயின் நினைவினிலே,
கல்லும் கொஞ்சம் அழுதுவிடும்!
கண்ணீர்த் துளிகளின் வேகத்திலே,
கண்ணின் மணிகளும் விழுந்துவிடும்!
(தீயில்)

Friday, August 22, 2008

தேன் தேன் தேன் உனைத்தேடி அலைந்தேன்

தேன் தேன் தேன் உனைத்தேடி அலைந்தேன்
உயிர்த் தீயை அளந்தேன் சிவந்தேன்
தேன் தேன் தேன் எனை நானும் மறந்தேன்
உனைக் காண பயந்தேன் கரைந்தேன்
என்னவோசொல்லத் துணிந்தேன்
ஏதெதோசெய்யத் துணிந்தேன்
உன்னோடு சேரத்தானே நானும் அலைந்தேன்
(தேன்)

அள்ள வரும் கையை ரசித்தேன்
ஆள வரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்

முட்ட வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் ஏங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் சொல்லாததையும் ரசித்தேன்

நீ செய்யும் யாவும் ரசித்தேன்
ஏதும் செய்யாததையும் ரசித்தேன்
உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்
(தேன்)

சேலையில் நிலவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்

திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்னை அறிந்தேன்
ஏன் உன்னை திருடத்தானே ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்

உன் தென்றல் உன்னை அறிந்தேன்
அதில் தூசும் பெண்மை அறிந்தேன்
நீ நடமாடும் திராட்சை தோட்டம் எதிரில் அறிந்தேன்

(தேன்)(தேன்)