Wednesday, December 30, 2009

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

படம்: சுப்ரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடல்: தாமரை
பாடியவர்கள்: தீபா மிரியம், பெல்லி ராஜ்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

(கண்கள் இரண்டால்)


பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றி


கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

( கண்கள் இரண்டால் )

கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

(கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்)



Tuesday, November 17, 2009

பாடல் : வசீகரன்
குரல் : கிருஷ்ணராஐ; குழுவினர்
இசை : வி.எஸ்.உதயா

வல்லைவெளி காற்றடிக்கும்
திரளி மீன் துள்ளியெழும்
ஒடியல் கூழ் குடித்தால்
மனமெங்கும் விண்கூவும்

பல்லவி

பனங்காய்ப் பணியாரமே பனங்காய்ப் பணியாரமே
பச்சைக் கொழுந்து வெத்திலையே
உன் பார்வை கொஞ்சம் பத்தலையே
பனையோலைப் பாய் விரிச்சு
படுத்துறங்கும் மணியக்கா மணியக்கா
கமுகமரப் பாக்குத் தந்து கவுக்கிறது என்னக்கா

சரணம் 1

காங்கேசன்துறை சுண்ணாம்பை கொஞ்சம்
தடவித் தடவிகொடடி
உன் கையால என் வாய் சிவக்க
வெற்றிலை மடிச்சுக் கொடடி

கொக்கார மூலைக்குள்ளே கொக்கு வந்து நிக்குது
கொக்கரக்கோ சேவல் என் வீட்டுக் கூரையில் ஏறுது.

கீரிமலை பனங்கள்ளும் களுத்துறைக் கருவாடும்
ஒன்றாகச் சேர்த்தடிச்சா கிக்குத்தான் கிக்குத்தான்

நான் கோவிற்கடவை ஆளு! நீ
சேலை கட்டிய தேரு !

சரணம் 2

மட்டு நகர் தயிர் எடுத்து
வளைஞ்சி நெளிஞ்சி வாடி
என் உயிரை பிடித்து உறைய வைத்து
உறியில் வைத்துப் போடி

மண்பானைத் தயிர் கனக்கம் என் நெஞ்சு துடிக்கும்
சும்மாடாய் நான் வரவா? சும்மாடாய் நான் வரவா?

கண்டிக் குளிருலதான்
கைகால் விறைக்குதடி
கொஞ்சம் சூடேத்த
நெஞ்சு நினைக்குதடி

முல்லைத்தீவு போவோம்
முயலு இரண்டு பிடிப்போம்
நீ மூச்சிழுக்கும் நேரம்
நான் பேச்சிழந்து போவேன்

Monday, August 3, 2009

யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால்

பாடல் : வசீகரன் -காதல் கடிதம்
குரல் : சாம்.பி.கீர்த்தன்
இசை : வி.எஸ்.உதயா


பல்லவி

யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால்
யாழ் மீட்டுமே ரயில் தண்டவாளம்
யாழ்மண்ணிலே நாங்கள் கால்பதிக்கவே
வாழ்த்துரைக்குமே ரயில் தண்டவாளம்
எங்கடை மக்களுக்கு - ஓர்
உறவுப் பாலம் நீ - சிறு
சங்கடம் இல்லாமல்
தேசிய சினேகம் வளர்த்திருப்பாய்

சரணம் 1

கோட்டையிலே கூச் சத்தம்
போகுமிடமெல்லாம் புதுச்சந்தம்
யாழ்நகர் சென்று சேரும் வரை
ஊர்களை இணைக்கும் பாலம் நீ

றாகமத்தைத் தாண்ட சேற்றெருமை துள்ளும்
அலரிமலர்த் தோட்டம் அழகழகாய் ஆடும்
பள்ளித் தாமரைகள் ஆனந்த நடை பயிலும்
போதிமரப் புத்தன் கோயில்களைத் தாண்டும்

பெட்டி விட்டு பெட்டி தாவலாம் நண்பனே
சின்னச் சின்னக் காதல் பார்க்கலாம் நண்பியே
ஐன்னல் ஓரம் ஓடும் வயல்கள் சந்தோசம்(2) - அதில்
பச்சைப் பயிர்கள் ஆடும் நடனம் சந்தோசம்(2)

சரணம் 2

வன்னியைத் தொட்ட ரயிலே நீ
செம்மண் வாசனை நுகர்ந்தாயா
தென்னை தொட்ட தென்றலென- நம்
உள்ளம் குதிப்பதை உணாந்தாயா

வேலிகளில் எல்லாம் தலையசைக்கும் கிளுவை
வேப்ப மரக்காற்றும் புதுக்கவிதையாக இனிக்கும்
நாள் முழுக்க உழைக்கும் கமக்காரர் வேகம்
யாழ்தேவி உனக்குப் போட்டியாக வருமோ?

பெட்டி விட்டு பெட்டி தாவலாம் நண்பனே
சின்னச் சின்னக் காதல் பார்க்கலாம் நண்பியே
பனையில் ஆடும் காவோலை சங்கீதம் சங்கீதம்
யாழ்ப்பாணம் வந்ததைச் சொல்லும் பனைவாசம் சந்தோசம்

Thursday, June 11, 2009

கண்டேன் கண்டேன் கண்டேன்

படம் : பிரிவோம் சந்திப்போம்
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : கார்த்திக், ஸ்வேதா


ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பெ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள்
எதிரே எதிரே..

பெ: பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட
போதை தரும் காதல் வர

தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: மோதும் மோதும் கொலுசொலி
ஏங்கும் ஏங்கும் மனசொலியை பேசுதே...

பெ: போதும் போதும்
இதுவரை யாரும் கூறா
புகழுரையே கூசுதே...

ஆ: பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி

பெ: பேசாது போனாலும் நீ என் சங்கதி

ஆ: கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை
விக்கல் முதல் தும்மல் வரை
கட்டில் முதல் தொட்டில் வரை
அவளை அவளை அவளை அவளை

பெ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

ஆ: கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பெ: காணும் காணும்
இருவிழி காதல் பேச
இமைகளிலே கவிதைபடி...

ஆ: ஏதோ ஏதோ
ஒருவித ஆசை தோன்ற
தனிமையிது கொடுமையடி

பெ: நீங்காமல் நாம் சேர நீளமாகும் இன்பமே

ஆ: தூங்காமல் கைசேர காதல் தங்குமே

பெ: ரெட்டைகிளி அச்சத்திலே
நெஞ்சுக்குழி வெப்பத்திலே
சுட்டித்தனம் வெட்கத்திலே
அடடா அடடா அடடா அடடா

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

பெ: கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்

பெ: எட்டித் தொட நிற்கும் அவன்
எதிரே எதிரே..

ஆ: பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட

பெ: போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன்

Friday, January 2, 2009

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!

படம்: வாரணம் ஆயிரம்
இயற்றியவர்: கவிஞர் தாமரை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், பிரசன்னா


நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ?
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ?
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு

நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
(நெஞ்சுக்குள்..)