Monday, August 3, 2009

யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால்

பாடல் : வசீகரன் -காதல் கடிதம்
குரல் : சாம்.பி.கீர்த்தன்
இசை : வி.எஸ்.உதயா


பல்லவி

யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால்
யாழ் மீட்டுமே ரயில் தண்டவாளம்
யாழ்மண்ணிலே நாங்கள் கால்பதிக்கவே
வாழ்த்துரைக்குமே ரயில் தண்டவாளம்
எங்கடை மக்களுக்கு - ஓர்
உறவுப் பாலம் நீ - சிறு
சங்கடம் இல்லாமல்
தேசிய சினேகம் வளர்த்திருப்பாய்

சரணம் 1

கோட்டையிலே கூச் சத்தம்
போகுமிடமெல்லாம் புதுச்சந்தம்
யாழ்நகர் சென்று சேரும் வரை
ஊர்களை இணைக்கும் பாலம் நீ

றாகமத்தைத் தாண்ட சேற்றெருமை துள்ளும்
அலரிமலர்த் தோட்டம் அழகழகாய் ஆடும்
பள்ளித் தாமரைகள் ஆனந்த நடை பயிலும்
போதிமரப் புத்தன் கோயில்களைத் தாண்டும்

பெட்டி விட்டு பெட்டி தாவலாம் நண்பனே
சின்னச் சின்னக் காதல் பார்க்கலாம் நண்பியே
ஐன்னல் ஓரம் ஓடும் வயல்கள் சந்தோசம்(2) - அதில்
பச்சைப் பயிர்கள் ஆடும் நடனம் சந்தோசம்(2)

சரணம் 2

வன்னியைத் தொட்ட ரயிலே நீ
செம்மண் வாசனை நுகர்ந்தாயா
தென்னை தொட்ட தென்றலென- நம்
உள்ளம் குதிப்பதை உணாந்தாயா

வேலிகளில் எல்லாம் தலையசைக்கும் கிளுவை
வேப்ப மரக்காற்றும் புதுக்கவிதையாக இனிக்கும்
நாள் முழுக்க உழைக்கும் கமக்காரர் வேகம்
யாழ்தேவி உனக்குப் போட்டியாக வருமோ?

பெட்டி விட்டு பெட்டி தாவலாம் நண்பனே
சின்னச் சின்னக் காதல் பார்க்கலாம் நண்பியே
பனையில் ஆடும் காவோலை சங்கீதம் சங்கீதம்
யாழ்ப்பாணம் வந்ததைச் சொல்லும் பனைவாசம் சந்தோசம்

No comments: